🔗

புகாரி: 6215

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

بِتُّ فِي بَيْتِ مَيْمُونَةَ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهَا، فَلَمَّا كَانَ ثُلُثُ اللَّيْلِ الآخِرُ، أَوْ بَعْضُهُ، قَعَدَ فَنَظَرَ إِلَى السَّمَاءِ، فَقَرَأَ: {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالأَرْضِ وَاخْتِلاَفِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الأَلْبَابِ}


6215. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(ஒரு நாள்) நான் (என் சிறிய தாயார்) மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் இரவு தங்கினேன். அவர்களிடம் நபி(ஸல்) அவர்களும் இருந்தார்கள். ‘இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி’ அல்லது ‘அதில் சிறிது நேரம்’ ஆனபோது நபி(ஸல்) அவர்கள் (படுக்கையிலிருந்து எழுந்து) அமர்ந்து வானத்தைப் பார்த்தவாறு ‘நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்(பு அமைப்)பிலும், இரவு – பகல் மாறி, மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன’ எனும் (திருக்குர்ஆன் 03:190 வது) இறைவசனத்தை ஓதினார்கள். 248

Book :78