عَطَسَ رَجُلاَنِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَشَمَّتَ أَحَدَهُمَا وَلَمْ يُشَمِّتِ الآخَرَ، فَقَالَ الرَّجُلُ: يَا رَسُولَ اللَّهِ، شَمَّتَّ هَذَا وَلَمْ تُشَمِّتْنِي، قَالَ: «إِنَّ هَذَا حَمِدَ اللَّهَ، وَلَمْ تَحْمَدِ اللَّهَ»
பாடம் : 127 தும்மியவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (லிஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்ல வில்லையானால், அவருக்கு (‘யர்ஹமுக் கல்லாஹ்லி அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்’ என்று) மறுமொழி சொல்லத் தேவையில்லை.
6225. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்கருகில் இருவர் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி(ஸல்) அவர்கள் (‘அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக’ என) மறுமொழி கூறினார்கள். இன்னொருவருக்கு மறுமொழி கூறவில்லை. அப்போது அந்த மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! இவருக்கு மறு மொழி கூறினீர்கள். எனக்கு மறுமொழி கூறவில்லையே!’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இவர் (தும்மியவுடன்) (‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று) இறைவனைப் புகழ்ந்தார். நீர் (‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று கூறி) இறைவனைப் புகழவில்லை. (எனவே, இவருக்கு மறுமொழி பகர்ந்தேன். உமக்கு மறுமொழி பகரவில்லை)’ என்று பதிலளித்தார்கள். 260
Book : 78