«يُسَلِّمُ الرَّاكِبُ عَلَى المَاشِي، وَالمَاشِي عَلَى القَاعِدِ، وَالقَلِيلُ عَلَى الكَثِيرِ»
பாடம் : 5 வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கு (முதலில்) சலாம் சொல்வது.
6232. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் சொல்லட்டும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 79