🔗

புகாரி: 6277

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


பாடம் : 38 (சாய்ந்துகொள்வதற்காக) ஒருவருக்குத் தலையணை வைக்கப்படுதல்.

6277. அபூ கிலாபா அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

அபுல்மலீஹ்(ரஹ்) அவர்கள் (என்னிடம்), நான் உங்கள் தந்தை ஸைத்(ரஹ்) அவர்களுடன் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.

நான் (அதிகமாக) நோன்பு நோற்பது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. எனவே, (ஒரு நாள்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் (அவர்கள் சாய்ந்து கொள்வதற்காக) பேரீச்ச நாறினால் நிரப்பப்பட்ட தலையணையொன்றை வைத்தேன். ஆனால், அவர்கள் தரையின் மீதே அமர்ந்தார்கள். தலையணை எனக்கும் அவர்களுக்கும் இடையே இருந்தது. அப்போது அவர்கள் என்னிடம், ‘ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாள்கள் (நோன்பு நோற்றால்) உமக்குப் போதுமே’ என்று கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! (நான் அதைவிட அதிக நாள்கள் நோன்பு நோற்க சக்தி பெற்றுள்ளேன்)’ என்றேன். அவர்கள், ‘ஐந்து நாள்கள் (நோற்றுக் கொள்க)’ என்றார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! (அதை விட அதிக நாள் நோன்பு நோற்க சக்தி பெற்றுள்ளேன்)’ என்று சொன்னேன். அவர்கள், ‘(மாதம் ஒன்றுக்கு)’ என்றார்கள். நான் (மீண்டும்), ‘இறைத்தூதர் அவர்களே! (இன்னும் அதிக நாள் நோற்க முடியும்)’ என்று சொன்னேன். அவர்கள், ‘பதினோரு நாள்கள் (நோன்பு நோற்றால்) உமக்குப் போதுமே’ என்றேன். அவர்கள், ‘ஐந்து நாள்கள் (நோற்றுக் கொள்க)’ என்றார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! (இன்னும் அதிக நாள் நோற்க முடியும்)’ என்று சொன்னேன். அவர்கள், ‘பதினொரு நாள்கள் (நோன்பு நோற்றுக் கொள்க)’ என்றார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! (அதை விட அதிக நான் நோன்பு நோற்கும் சக்தி பெற்றுள்ளேன்)’ என்று சொன்னேன்.

அதற்கு அவர்கள் (இறைத்தூதர்) தாவூத் அவர்களின் நோன்பை விட மேலான நோன்பில்லை. (அது) ஒரு நாள் நோன்பு நோற்பது; ஒரு நாள் நோன்பில்லாமல் இருப்பது எனச் சரிபாதிக் காலம் ஆகும் என்றார்கள்.

Book : 79