பாடம் : 45 (மூவர் இருக்கும் போது) மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் இரகசியம் பேசலாகாது. அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இரகசியம் பேசிக் கொண்டால், பாவத்திற்காகவும், வரம்பு மீறுவதற்காகவும், (நம்) தூதருக்கு மாறு செய்வதற்காகவும் இரகசியம் பேசாதீர்கள்; ஆனால், நன்மை செய்வதற்காகவும் பயபக்தியுடன் இருப்பதற் காகவும் இரகசியம் பேசிக்கொள்ளுங்கள். இறைநம்பிக்கை கொண்டவர்களைக் கவலையடையச் செய்வதற்காக ஷைத்தானினால் ஏற்பட்டதே இந்த இரகசிய ஆலோசனை ஆகும். ஆனால், அவனால் அல்லாஹ்வின் ஆணையின்றி (அவர்களுக்கு) எத்தீங்கும் அளித்திட முடியாது. ஆகவே, இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே சார்ந்திருக்கட்டும்! (58:9, 10) அல்லாஹ் கூறுகின்றான் : இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் (நம்) தூதருடன் தனிமையில் பேசுவதாயின், அவ்வாறு பேசுவதற்கு முன் ஏதேனும் தர்மம் செய்யுங்கள். இது உங்களுக்கு நன்மையாகவும், (உள்ளத்திற்குத்) தூய்மையாகவும் இருக்கும். ஆனால், (தர்மம் செய்வதற்கு) நீங்கள் வசதி பெற்றிராவிடில் நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன். நீங்கள் தனிமையில் உரையாடுவதற்கு முன்னால் தான தர்மங்கள் செய்ய வேண்டியிருக்குமே என்று அஞ்சுகிறீர்களா? அப்படி நீங்கள் செய்ய(இயல)வில்லையெனில் (அதற்காக பாவமன்னிப்புக் கோரும்) உங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்; ஆகவே, தொழுகையை (முறைப் படி) நிலைநிறுத்துங்கள்; இன்னும், ஸகாத்தும் கொடுத்துவாருங்கள்; மேலும், அல்லாஹ் வுக்கும், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள்; அன்றியும் நீங்கள் செய்கின்றவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான். (58:12, 13)
6288. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
நீங்கள் மூவர் இருக்கும்போது மூன்றாமவரைவிட்டுவிட்டு இருவர் மட்டும் இரகசியம் பேசவேண்டாம்.
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
Book : 79