كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ قَالَ: «اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا» فَإِذَا اسْتَيْقَظَ قَالَ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ»
6325. அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது ‘அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா’ (இறைவா! உன் பெயர் கூறியே இறக்கிறேன். உயிர் வாழவும் செய்கிறேன்)’ என்று கூறுவார்கள்.
(உறக்கத் திலிருந்து விழிக்கும்போது, ‘அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃத மா அமாதனா வ இலைஹின் நுஷூர் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்து பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியுள்ளது.) என்று கூறுவார்கள்.
அத்தியாயம்: 80