🔗

புகாரி: 6341

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«رَفَعَ يَدَيْهِ حَتَّى رَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ»


பாடம் : 23 பிரார்த்திக்கும் போது கைகளை உயர்த்துவது அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: (என் தந்தையின் சகோதரர் அபூஆமிர் கொல்லப்பட்ட சமயம்) நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு தம் இரு கைகளையும் உயர்த்தினார்கள். அப்போது அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நான் கண்டேன்.30 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தம் இரு கைகளையும் உயர்த்தியவாறு, இறைவா! கா-த் செய்த தவற்றுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என உன்னிடம் நான் அறிவிக்கிறேன் என்று கூறினார்கள்.31

6341. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்த போது) அவர்களின் அக்குள்களின் வெண்மையை நான் காணும் அளவுக்கத் தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள்.

Book : 80