يَا رَسُولَ اللَّهِ، أَنَسٌ خَادِمُكَ، ادْعُ اللَّهَ لَهُ، قَالَ: «اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ، وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ» وَعَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، مِثْلَهُ
பாடம் : 47 சுபிட்சத்துடன் செல்வம் பெருகிடப் பிரார்த்திப்பது.
6378. & 6379. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அனஸ் தங்களின் சேவகராவார். அவருக்காகப் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்கிடுவாயாக! அனஸுக்கு நீ வழங்கிய(எல்லா) வற்றிலும் சுபிட்சத்தை ஏற்படுத்துவாயாக’ என்று பிரார்த்தித்தார்கள்.
இதைக் போன்றே அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடமிருந்து ஹிஷாம் இப்னு ஸைத்(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்.
Book : 80