🔗

புகாரி: 6396

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الخَنْدَقِ، فَقَالَ: «مَلَأَ اللَّهُ قُبُورَهُمْ وَبُيُوتَهُمْ نَارًا، كَمَا شَغَلُونَا عَنْ صَلاَةِ الوُسْطَى حَتَّى غَابَتِ الشَّمْسُ» وَهِيَ صَلاَةُ العَصْرِ


6396. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.

அகழ்ப் போரின்போது நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், ‘எதிரிகளுடைய புதை குழிகளையும் அவர்களின் வீடுகளையும் அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக! அவர்கள், சூரியன் மறையும் வரை நடுத் தொழுகையிலிருந்து நம்முடைய கவனத்தைத் திருப்பிவிட்டார்கள்’ என்று கூறினார்கள். அஸ்ர் தொழுகையே நடுத் தொழுகையாகும்.

Book :80