🔗

புகாரி: 6405

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، حُطَّتْ خَطَايَاهُ، وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ البَحْرِ


பாடம்: 65

ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று கூறுவதன் சிறப்பு.

6405. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

“ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி” (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 80