🔗

புகாரி: 6472

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«يَدْخُلُ الجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ، هُمُ الَّذِينَ لاَ يَسْتَرْقُونَ، وَلاَ يَتَطَيَّرُونَ، وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ»


பாடம்: 21

யார் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை கொண்டிருக்கிறாரோ அவருக்கு அல்லாஹ்வே போதுமானவன் (எனும் 65:3ஆவது இறை வசனம்).

அதாவது மனிதர்களுக்கு ஏற்படும் எல்லா நெருக்கடியான நிலைகளிலும் அல்லாஹ்வே போதுமானவன் என ரபீஉ பின் குஸைம் (ரஹ்) அவர்கள் (விளக்கம்) கூறினார்கள்.

6472. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில், ஓதிப்பார்க்க மாட்டார்கள். பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள். தம் இறைவ(ன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவ)னையே சார்ந்திருப்பார்கள்.

அத்தியாயம்: 81