🔗

புகாரி: 6490

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِي المَالِ وَالخَلْقِ ، فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ»


பாடம்: 30

(செல்வத்தில்) தன்னைவிடக் கீழ் நிலையில் இருப்பவரை (மனிதன்) பார்க்கட்டும்; தன்னைவிட மேல் நிலையில் இருப்பவரைப் பார்க்க வேண்டாம்.

6490. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 81