«اطَّلَعْتُ فِي الجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا الفُقَرَاءَ، وَاطَّلَعْتُ فِي النَّارِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ»
பாடம் : 51
சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) அத்ன்’ எனும் சொல்லுக்கு நிலையானது’ என்று பொருள். (அதன் வினைச் சொல்லான) அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன் என்று பொருள். இதிலிருந்தே மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், மஅதினி ஸித்க்’ என்றால் உண்மையின் பிறப்பிடம்’ என்று பொருள்.
6546. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
நான் (விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன்.
என இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அறிவித்தார். 126
Book : 83