🔗

புகாரி: 662

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ غَدَا إِلَى المَسْجِدِ وَرَاحَ، أَعَدَّ اللَّهُ لَهُ نُزُلَهُ مِنَ الجَنَّةِ كُلَّمَا غَدَا أَوْ رَاحَ»


பாடம்: 37

பள்ளிவாசலுக்குச் சென்று வரும் மனிதர் அடையப் பெறும் சிறப்பு. 

662. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பள்ளிவாசலுக்கு ஒருவர் காலையிலோ மாலையிலோ சென்றால், அவர் காலையிலும் மாலையிலும் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்கு உரிய இடத்தை அல்லாஹ் தயார் செய்கிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 10