كَانَتْ يَمِينُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ وَمُقَلِّبِ القُلُوبِ»
பாடம் : 3
நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும் போது), என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! என்று கூறினார்கள்.10
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின்போது) லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ் வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும் போது) வல்லாஹி’, பில்லாஹி’, தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6628. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
‘இல்லை. உள்ளங்களைப் புரட்டுபவன் மீதாணையாக!’ என்பது நபி(ஸல்) அவர்கள் சத்தி(யம் செய்யும்போது அதிகமாகப் பயன்படுத்தும் வாக்கி)யமாக இருந்தது.13
Book : 83