🔗

புகாரி: 6664

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِأُمَّتِي عَمَّا وَسْوَسَتْ، أَوْ حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا، مَا لَمْ تَعْمَلْ بِهِ أَوْ تَكَلَّمْ»


பாடம் : 15

மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்…?55

அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் தவறுதலாகச் செய்துவிட்டவற்றில் உங்கள் மீது குற்றமில்லை; மாறாக, மனம் விரும்பி வேண்டுமென்றே செய்தது தான் குற்றமாகும். (33:5)

மேலும் (அல்லாஹ்) கூறுகின்றான்: நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள் என அவர் (மூசா) கூறினார். (18:73)

6664. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன்படி செயல்படாத வரை, அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாத வரை அல்லாஹ் (அவற்றுக்குத் தண்டனை வழங்குவதில்லை;) மன்னித்துவிடுகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

Book : 83