قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: زُرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ؟ قَالَ: «لَا حَرَجَ» قَالَ آخَرُ: حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ؟ قَالَ: «لَا حَرَجَ» قَالَ آخَرُ: ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ؟ قَالَ: «لَا حَرَجَ»
6666. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(துல்ஹஜ் 10ஆம் நாளில் மினாவில் இருந்தபோது) நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர், ‘கல்லெறிவதற்கு முன்பே நான் (தவாஃபில் ஸியாரா) சுற்றி வந்துவிட்டேன்’ என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை’ என்றார்கள். மற்றொருவர், ‘பலியிடுவதற்கு முன்பே தலை முடி களைந்துவிட்டேன்’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை’ என்றார்கள். இன்னொருவர், ‘கல்லெறிந்தற்கு முன்பே பலியிட்டுவிட்டேன்’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘குற்றமில்லை’ என்றார்கள்.
Book :83