أَنَّ عُمَرَ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي نَذَرْتُ فِي الجَاهِلِيَّةِ أَنْ أَعْتَكِفَ لَيْلَةً فِي المَسْجِدِ الحَرَامِ، قَالَ: «أَوْفِ بِنَذْرِكَ»
பாடம் : 29
அறியாமைக் காலத்தில் ஒருவர் நான் எந்த மனிதனிடத்திலும் பேசமாட்டேன்’ என்று நேர்ந்து கொண்டார்;அல்லது சத்தியம் செய்தார். பிறகு அவர் முஸ்லிமாகிவிட்டால் (அவற்றை நிறைவேற்றுவது அவர் மீது கடமையா?)
6697. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! மஸ்ஜிதுல் ஹராம் (புனிதப்) பள்ளிவாசலில் ஓர் இரவு ‘இஃதிகாஃப்’ இருப்பதாக அறியாமைக் காலத்தில் நேர்ந்துகொண்டேன். (இப்போது அதை நிறைவேற்ற வேண்டுமா?)’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘உங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றுங்கள்’ என்றார்கள்.97
Book : 83