«إِنَّ اللَّهَ لَغَنِيٌّ عَنْ تَعْذِيبِ هَذَا نَفْسَهُ» وَرَآهُ يَمْشِي بَيْنَ ابْنَيْهِ
6701. அனஸ் (ரலி) அறிவித்தார்.
‘இ(ந்த முதிய)வர் தம்மை (இவ்விதம்) வேதனை செய்து கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அ(ந்த முதிய)வர் தம் இரண்டு புதல்வர்களுக்கிடையே (தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட) நடந்துவந்ததை நபி (ஸல்) அவர்கள் பார்(த்துவிட்டு, விவரம் கேட்க, ‘நேர்த்திக்கடன்’ என்று மக்கள் கூறியபோது தான் மேற்கண்டவாறு தெரிவி)த்தார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.
Book :83