🔗

புகாரி: 671

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا وُضِعَ العَشَاءُ وَأُقِيمَتِ الصَّلاَةُ، فَابْدَءُوا بِالعَشَاءِ»


பாடம்: 42

உணவு (முன்னே) வந்துவிட்ட நிலையில் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் (முதலில் சாப்பிடுவதா? அல்லது தொழுவதா?)

(இத்தகைய நிலையில்) இப்னு உமர் (ரலி) அவர்கள் முதலில் சாப்பிடுவார்கள் (பிறகு தொழுவார்கள்).

ஒருவர் தமது (அத்தியாவசியத்) தேவைகளை நோக்கிச் சென்று (அவற்றை முடித்துவிட்டு) தமது உள்ளம் ஓய்வாக இருக்கும் நிலையில் தொழுகையில் ஈடுபடுவதே புத்திசாலித் தனமாகும் என அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். 

671. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘இரவு நேர உணவு வைக்கப்பட்டுத் தொழுகைக்காக இகாமத்தும் சொல்லப் படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 10