🔗

புகாரி: 6759

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَرَادَتْ عَائِشَةُ، أَنْ تَشْتَرِيَ بَرِيرَةَ، فَقَالَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّهُمْ يَشْتَرِطُونَ الوَلاَءَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْتَرِيهَا، فَإِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ»


பாடம் : 23

(தம்மால் விடுதலையான அடிமைக்கு) வாரிசாகும் உரிமை பெண்களுக்கும் உண்டு.

6759. இப்னு உமர் (ரலி) கூறியதாவது:

அடிமை பெண்ணாயிருந்த பரீராவை விலைக்கு வாங்க ஆயிஷா (ரலி) அவர்கள் விரும்பினார்கள். அப்போது அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “பரீராவின் எசமானர்கள் வாரிசுரிமை தங்களுக்கே இருக்க வேண்டும் என்று நிபந்தனையிடுகின்றனர்” என்று சொன்னார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அவளை நீ வாங்கி விடுதலை செய்! ஏனெனில், (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது’ என்றார்கள்.