🔗

புகாரி: 6789

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«تُقْطَعُ اليَدُ فِي رُبُعِ دِينَارٍ فَصَاعِدًا»


பாடம் : 13

திருடிய ஆண், திருடிய பெண் ஆகியோரின் கரங்களைத் துண்டித்துவிடுங்கள் எனும் (5:38ஆவது) வசனத்தொடரும்,13 எந்த அளவு திருடினால் (கை) வெட்ட வேண்டும்? என்பது பற்றியும்.14

அலீ (ரலி) அவர்கள் (திருட்டுக் குற்றத்திற் காக) முன்கையை (மணிக்கட்டுவரை) துண்டித்தார்கள்.15

திருடிவிட்ட ஒரு பெண்ணின் (வலக் கரத்தை விட்டுவிட்டு) இடக் கரம் துண்டிக்கப் பட்டது. இது குறித்து கத்தாதா (ரஹ்) அவர்கள் அவ்வளவுதான். (இனி வலக் கரம் துண்டிக்கப்படாது) என்று கூறினார்கள்.

6789. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

கால் தீனார்(பொற் காசு), அல்லது அதற்கு மேல் திருடியதற்காகக் கை வெட்டப்படும்.

என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 86