🔗

புகாரி: 6803

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «قَطَعَ العُرَنِيِّينَ وَلَمْ يَحْسِمْهُمْ حَتَّى مَاتُوا»


பாடம் : 16

மதம் மாறி வன்முறையில் ஈடுபட்டோரின் காயங்களுக்கு மருந்திடாமல் அவர்கள் மாண்டுபோகும் வரை நபி (ஸல்) அவர்கள் அப்படியே விட்டுவிட்டார்கள்.

6803. அனஸ் (ரலி) அறிவித்தார்.

உரைனா குலத்தாரின் கை கால்களை நபி (ஸல்) அவர்கள் வெட்டச் செய்தார்கள். அவர்கள் இறக்கும் வரை அவர்களின் காயங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் மருந்திடவில்லை.22

Book : 86