🔗

புகாரி: 6867

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لاَ تُقْتَلُ نَفْسٌ إِلَّا كَانَ عَلَى ابْنِ آدَمَ الأَوَّلِ كِفْلٌ مِنْهَا»


பாடம் : 2

ஓர் உயிரை வாழவைப்பவன் மக்கள் அனைவரையும் வாழவைப்பவனைப் போன்றவனாவன் எனும் (5:32ஆவது) இறைவசனம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அதாவது) முறையின்றி ஓர் உயிரைக் கொலை செய்வதிலிருந்து யார் விலகிக்கொள்கின்றாரோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவரைப் போன்றவர் ஆவார்.

6867. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

உலகில் அநியாயமாக ஒரு கொலை நடைபெறும்போது அந்தக் கொலையின் பாவத்தில் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களின் முதலாவது மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும்.

என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.6

Book : 87