🔗

புகாரி: 6869

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الوَدَاعِ: «اسْتَنْصِتِ النَّاسَ، لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


6869. ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றுகையில்) என்னிடம், ‘மக்களை மெளனமாக இருக்கச் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். (அமைதி திரும்பிய பின்னர்) ‘எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள் (ஒற்றுமையுடன் இருங்கள்)’ என்றார்கள்.8

இந்த ஹதீஸை, நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூ பக்ரா (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரும் அறிவித்தார்கள்.

Book :87