«أَنَّ ابْنَةَ النَّضْرِ لَطَمَتْ جَارِيَةً فَكَسَرَتْ ثَنِيَّتَهَا، فَأَتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَ بِالقِصَاصِ»
பாடம் : 19
பல்லுக்குப் பல்32
6894. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.
(என் பாட்டனார்) நள்ர் அவர்களின் புதல்வி (ருபய்யிஉ பின்த் நள்ர்) ஓர் இளம் பெண்ணின் கன்னத்தில் அறைந்து அவளுடைய முன் பல்லை உடைத்துவிட்டார். எனவே, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வழக்கைக் கொண்டு) வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் பழிவாங்கிடுமாறு உத்தரவிட்டார்கள்.
Book : 87