🔗

புகாரி: 6932

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

وَذَكَرَ الحَرُورِيَّةَ، فَقَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَمْرُقُونَ مِنَ الإِسْلاَمِ مُرُوقَ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ»


6932. முஹம்மத் இப்னு ஸைத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

(என் பாட்டனார்) அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரூரிய்யாக்கள் (‘காரிஜிய்யாக்கள்’) குறித்துக் கூறியபோது, ‘(வில்லில் இருந்து புறப்பட்ட) அம்பு வேட்டைப் பிராணியின் உடலில் இருந்து வெளியேறுவதைப் போன்று இவர்கள் இஸ்லாத்தைவிட்டும் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் செல்வார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்’ என்று கூறினார்கள்.

Book :88