🔗

புகாரி: 698

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

نِمْتُ عِنْدَ مَيْمُونَةَ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهَا تِلْكَ اللَّيْلَةَ «فَتَوَضَّأَ، ثُمَّ قَامَ يُصَلِّي، فَقُمْتُ عَلَى يَسَارِهِ، فَأَخَذَنِي، فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً، ثُمَّ نَامَ حَتَّى نَفَخَ، وَكَانَ إِذَا نَامَ نَفَخَ، ثُمَّ أَتَاهُ المُؤَذِّنُ، فَخَرَجَ، فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


பாடம் : 58 ஒரு மனிதர் இமாமுக்கு இடப் பக்கம் (போய்) நிற்க, இமாம் (தொழுகையில் இருந்தவாறே) அந்த மனிதரைத் (தமது கையால் இழுத்து) வலப் பக்கத்தில் நிறுத்துவதால் இருவரின் தொழுகையும் பாழாகிவிடாது. 

698. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(என்னுடைய சிறிய தாயார்) மைமூனா(ரலி)வுடைய வீட்டில் நபி(ஸல்) அவர்கள் இருந்த இரவில் நான் தூங்கினேன். அவர்கள் உளூச் செய்து தொழுவதற்காக நின்றார்கள். நான் சென்று அவர்களின் இடப்பக்கமாக நின்றேன். அப்போது அவர்கள் என்னைப் பிடித்து அவர்களின் வலப்பக்கமாக நிறுத்தினார்கள். பின்னர் பதின்மூன்று ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் அவர்கள் குறட்டை வெளியாகும் அளவிற்குத் தூங்கிவிட்டார்கள். அவர்கள் தூக்கத்தில் குறட்டை விடும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். பின்னர் முஅத்தின் வந்தபோது பள்ளிக்குச் சென்று தொழுகை நடத்தினார்கள். அவர்கள் உளூச் செய்யவில்லை.
Book : 10