🔗

புகாரி: 699

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

بِتُّ عِنْدَ خَالَتِي «فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ، فَقُمْتُ أُصَلِّي مَعَهُ، فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَأَخَذَ بِرَأْسِي، فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ»


பாடம் : 59 தலைமை தாங்கித் தொழுவிக்கும் எண்ணமில்லாமல் (தனியாகத்) தொழுது கொண்டிருப்பவரை மற்றவர்கள் பின்பற்றித் தொழுதால் (தொழுகை நிறைவேறும்). 

699. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

என்னுடைய சிறிய தாயார் (மைமூனா(ரலி)) வீட்டில் நான் இரவு தங்கினேன். நபி(ஸல்) அவர்கள் இரவில் எழுந்து தொழலானார்கள். அவர்களோடு நானும் தொழுவதற்காக அவர்களின் இடப்பக்கம் நின்றேன். அப்போது (தொழுகையில் நின்றவாறே) என் தலையைப் பிடித்து அவர்களின் வலப்பக்கம் நிறுத்தினார்கள்.
Book : 10