أَنَّ أُنَاسًا أُرُوا لَيْلَةَ القَدْرِ فِي السَّبْعِ الأَوَاخِرِ، وَأَنَّ أُنَاسًا أُرُوا أَنَّهَا فِي العَشْرِ الأَوَاخِرِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «التَمِسُوهَا فِي السَّبْعِ الأَوَاخِرِ»
பாடம் : 6
(இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர்கள் கண்ட கனவு. அல்லாஹ் கூறுகின்றான்: யூசுஃப் தம் தந்தையாரிடம், என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங் களும், சூரியனும்,சந்திரனும் – (இவை யாவும்) எனக்குச் சிரம்பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன் என்று கூறிய பொழுது, என் அருமை மகனே! உனது கனவைப் பற்றி உன் சகோதரர்களிடம் எடுத்துரைக்க வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு (எதிராக) சதி செய்வார்கள்; ஏனெனில், (அவ்வாறு சதி செய்யத் தூண்டும்) ஷைத்தான், நிச்சயமாக மனிதனுக்குப் பகிரங்க விரோதியாக இருக் கின்றான். இவ்வாறே உம் இறைவன் உம்மைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உமக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உம்மீதும், யஅகூபின் சந்ததியார் மீதும் முழுமையாகச் சொரிவான். இதற்கு முன்னர் உம்முடைய மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகியோர் மீதும் தன் அருளை அவன் முழுமையாகச் சொரிந்ததைப் போன்று. நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையோனுமாய் இருக்கின் றான். (12:4-6) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லாரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), என் தந்தையே! இது தான் முன்பு நான் கண்ட கனவின் விளக்க மாகும்; அதை என் இறைவன் மெய்ப்பித்தான். மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையே ஷைத்தான் பிரிவினையை உண்டாக்கிவிட்ட பின்னர் உங்களைக் கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான். நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுணுக்கமாகச் செய்கின்றவன்;நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன் என்று கூறினார். என் இறைவா! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங் களையும் எனக்குக் கற்றுத்தந்தாய். வானங் களையும் பூமியையும் படைத்தவனே! இம்மை யிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாகவே என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக! (என்று அவர் பிராத்தித்தார்.) (12:100, 101) (அபூஅப்தில்லாஹ் புகாரியாகிய நான் கூறுகின்றேன்:) (12:101ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) ஃபாத்திர்’ (படைத்தவன்) எனும் சொல்லும் அல்பதீஉ, அல்முப்திஉ, அல்பாரிஉ, அல்கா-க் ஆகிய சொற்களும் ஒரே பொருள் கொண்டவை ஆகும். (மேலும், 12:100ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) பத்வு’ எனும் சொல்லுக்குக் கிராமம்’ என்று பொருள். பாடம் : 7 (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் கண்ட கனவு. அல்லாஹ் கூறுகின்றான்: பின்னர் இஸ்மாயீல் (தம் தந்தை) இப்ராஹீமுடன் நடக்கும் பருவத்தை அடைந்த போது, என்னருமை மகனே! நான் உன்னை அறுத்துப் ப-யிடுவதாகக் கனவு கண்டேன். இதைப் பற்றி உமது கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக! என்று இப்ராஹீம் கூறினார். அதற்கு இஸ்மாயீல், என்னருமைத் தந்தையே! உங்களுக்கு இடப்பெற்ற கட்டளையை நிறைவேற்றுங்கள். அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள் என்று பதிலளித்தார். ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் இணங்கி, (இப்ராஹீம்) இஸ்மாயீலைப் ப-யிட முகம் குப்புறக் கிடத்திய போது,நாம் அவரை அழைத்து, இப்ராஹீம்! உறுதியாகவே நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே நற்பலன் அளிக்கிறோம். என்று கூறினோம். (37:102-105) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (37:103ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அஸ்லமா’ என்பதற்கு (இப்ராஹீம் இஸ்மாயில் ஆகிய) இருவரும் இறைவனின் கட்டளைக்கு இணங்கினர்’ என்று பொருள். மேலும், வ தல்லஹு’ என்பதற்கு,இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீலை (அறுத்துப் ப-யிட) முகங் குப்புறக் கிடத்தினார்கள்’ என்று பொருள். பாடம் : 8 பலர் காணும் கனவு ஒத்திருப்பது
6991. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(நபித் தோழர்களில்) சிலருக்கு ‘லைலத்துல் கத்ர்’ (எனும் மகத்துவமிக்க) இரவு (ரமளான் மாதத்தில்) கடைசி ஏழுநாள்களில் தேடிக் கொள்ளுங்கள்’ என்றார்கள்.6
Book : 91