🔗

புகாரி: 724

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُ قَدِمَ المَدِينَةَ فَقِيلَ لَهُ: مَا أَنْكَرْتَ مِنَّا مُنْذُ يَوْمِ عَهِدْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «مَا أَنْكَرْتُ شَيْئًا إِلَّا أَنَّكُمْ لاَ تُقِيمُونَ الصُّفُوفَ»


பாடம் : 75 தொழுகை வரிசைகளை நிறைவு செய்யாமலிருப்பது குற்றம். 

724. பஷீர் இப்னு யஸார் கூறினார்:

அனஸ்(ரலி) மதீனா வந்தபோது, ‘நபி(ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்துள்ள நடைமுறைக்கு மாற்றமாக எங்களிடம் எதையேனும் காண்கிறீர்களா?’ என்று கேட்கப்பட்டது. ‘நீங்கள் வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதில்லை என்பதைத் தவிர வேறு எந்தத் தவறையும் உங்களிடம் நான் காணவில்லை’ என்று அனஸ்(ரலி) கூறினார்.
Book : 10