🔗

புகாரி: 726

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ، فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَأْسِي مِنْ وَرَائِي، فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى وَرَقَدَ، فَجَاءَهُ المُؤَذِّنُ، فَقَامَ وَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


பாடம் : 77 இமாம் தமக்கு இடப் பக்கத்தில் நிற்பவரை தமக்குப் பின்புறமாக இழுத்து வலப் பக்கத்தில் நிறுத்தினால் அ(வ்விரு)வருடைய தொழுகை நிறைவேறவே செய்யும். 

726. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஓர் இரவு நான் நபி(ஸல்) அவர்களுடன் தொழும்போது அவர்களின் இடப்புறமாக நின்றேன். அப்போது அவர்கள் என் தலையின் பின்புறத்தைப் பிடித்துத் தம் வலப்புறத்தில் என்னை நிறுத்தினார்கள். தொழுததும் உறங்கிவிட்டார்கள். முஅத்தின் வந்ததும் எழுந்து உளூச் செய்யாமலே தொழுதார்கள்.
Book : 10