🔗

புகாரி: 7311

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لاَ يَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ، حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ وَهُمْ ظَاهِرُونَ»


பாடம் : 10 என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் உண்மைக்கு ஆதரவாகப் போராடிக் கொண்டே இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியது. (புகாரீயாகிய நான் கூறுகின்றேன்:) அவர்கள்தாம் அறிஞர்(பெருமக்)கள்.

7311. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் (உண்மைக்கு) ஆதரவாளர்களாக இருந்து கொண்டே இருப்பார்கள். இறுதியாக, அவர்கள் மேலோங்கியவர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களிடம் இறைக் கட்டளை(யான மறுமைநாள்) வரும்.

இதை முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.42

Book : 96