سَمِعَ مُعَاوِيَةَ، يُحَدِّثُ رَهْطًا مِنْ قُرَيْشٍ بِالْمَدِينَةِ، وَذَكَرَ كَعْبَ الأَحْبَارِ فَقَالَ: «إِنْ كَانَ مِنْ أَصْدَقِ هَؤُلاَءِ المُحَدِّثِينَ الَّذِينَ يُحَدِّثُونَ عَنْ أَهْلِ الكِتَابِ، وَإِنْ كُنَّا مَعَ ذَلِكَ لَنَبْلُو عَلَيْهِ الكَذِبَ»
பாடம்: 25
வேதக்காரர்களிடம் எதைப் பற்றியும் கேட்காதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியது.
7361. ஹுமைத் பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்:
முஆவியா (ரலி) அவர்கள் (ஹஜ்ஜின் போது) மதீனாவில் குறைஷியர் குழு ஒன்றுக்கு ஹதீஸ்களை அறிவித்ததை நான் கேட்டேன். அப்போது முஆவியா (ரலி) அவர்கள் கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, “வேதக்காரர்களிடமிருந்து செய்திகளை அறிவிப்பவர்களிலேயே மிகவும் வாய்மையானவர் கஅப் (ரஹ்) அவர்கள் தாம். அப்படியிருந்தும் நாங்கள் அன்னாருடைய செய்திகளில் தவறானவை ஏதும் உண்டா? என சோதித்துப் பார்த்துவந்தோம்” என்றார்கள்.
அத்தியாயம்: 96