«صَلُّوا قَبْلَ صَلاَةِ المَغْرِبِ»، قَالَ فِي الثَّالِثَةِ: «لِمَنْ شَاءَ»، كَرَاهِيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً
7368. அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அல்முஸனீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், ‘மஃக்ரிப்’ தொழுகைக்கு முன்பாக (இரண்டு ரக்அத்கள்) தொழுங்கள்’ என்றார்கள். மூன்றாம் முறையாகச் சொல்லும்போது, அதை மக்கள், (கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய) நபிவழியாக எடுத்துக்கொள்வார்கள் என்று அஞ்சி, ‘இது விரும்புவோருக்குத் தான்’ என்றார்கள்.104
Book :96