🔗

புகாரி: 739

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ  إِذَا دَخَلَ فِي الصَّلاَةِ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ، وَإِذَا رَكَعَ رَفَعَ يَدَيْهِ، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَفَعَ يَدَيْهِ، وَإِذَا قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ رَفَعَ يَدَيْهِ ، وَرَفَعَ ذَلِكَ ابْنُ عُمَرَ إِلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


பாடம் : 86

இரண்டாவது ரக்அத்திலிருந்து எழும் போது கைகளை உயர்த்துவது. 

739. இப்னு உமர் (ரலி) தொழுகையைத் ஆரம்பிக்கும்போது தக்பீர் கூறித் தம் கைகளை உயர்த்துவார்கள். ருகூவுக்குச் செல்லும் போதும் தம் கைகளை உயர்த்துவார்கள். ‘ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்’ எனக் கூறும் போதும் தம் கைகளை உயர்த்துவார்கள். இரண்டாம் ரக்அத் முடித்து எழும் போதும் தம் கைகளை உயர்த்துவார்கள். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாகவும் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: நாஃபிஃ (ரஹ்)

அத்தியாயம்: 10