أَكْثَرُ مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْلِفُ: «لاَ وَمُقَلِّبِ القُلُوبِ»
பாடம் : 11 உள்ளங்களைப் புரட்டக்கூடியவன் அல்லாஹ் கூறுகின்றான்: நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் புரட்டுகின்றோம். (6:110)
7391. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் சத்தியம் செய்யும்போது அதிகமாகப் பயன்படுத்திய வாக்கியம் ‘இல்லை; உள்ளங்களைப் புரட்டுபவன் மீதாணையாக!’ என்பதாகவே இருந்தது. 26
Book : 97