قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ: «أَمَعَكَ مِنَ القُرْآنِ شَيْءٌ؟»، قَالَ: نَعَمْ، سُورَةُ كَذَا وَسُورَةُ كَذَا، لِسُوَرٍ سَمَّاهَا
பாடம் : 21 (நபியே!) சாட்சியத்தில் மிகவும் பெரியது எது? எனக் கேளும். அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்கும் இடையே சாட்சி ஆவான் எனக் கூறும் (எனும் 6:19ஆவது இறைவசனம்). இந்த வசனத்தில் அல்லாஹ் தன்னை ஒரு பொருள் (ஷைஉ) என்று குறிப்பிடுகின்றான். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் உரையான குர்ஆனைப் பற்றி ஒரு பொருள் (ஷைஉ) என்று குறிப்பிட்டார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: அவனது (திரு)முகத்தைத் தவிர அனைத்துமே அழியக் கூடியவைதாம். (28:88)54
7417. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், ‘குர்ஆனிலிருந்து உங்களுடன் (மனனமாக) ஏதேனும் ஒன்று (ஷைஉ) இருக்கின்றதா?’ என்று கேட்டார்கள். அம்மனிதர் ‘ஆம். இன்ன , இன்ன ‘ என்று சில அத்தியாயக்ளைப் பெயர் குறிப்பிட்டுச் சொன்னார்.55
Book : 97