«لاَ يَزَالُ مِنْ أُمَّتِي قَوْمٌ ظَاهِرِينَ عَلَى النَّاسِ، حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ»
பாடம் : 29 நாம் ஒரு பொருளை (உருவாக்க) நாடினால் நாம் கூறுவதெல்லாம் ஆகுக’ என்பது தான் . உடனே அது உண்டாகிவிடும் எனும் (16:40ஆவது) இறைவசனம்.
7459. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
அல்லாஹ்வின் கட்டளை(யான மறுமை நாள்) வரும் வரை என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர், (உண்மையை எதிர்க்கும்) மக்களின் மீது மேலாண்மை கொண்டவர்களாகவே இருந்து கொண்டிருப்பார்கள்.
என முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.99
Book : 97