«مَا بَالُ أَقْوَامٍ يَرْفَعُونَ أَبْصَارَهُمْ إِلَى السَّمَاءِ فِي صَلاَتِهِمْ»، فَاشْتَدَّ قَوْلُهُ فِي ذَلِكَ، حَتَّى قَالَ: «لَيَنْتَهُنَّ عَنْ ذَلِكَ أَوْ لَتُخْطَفَنَّ أَبْصَارُهُمْ»
பாடம்: 92
தொழுது கொண்டிருக்கும் போது வானத்தைப் பார்ப்பது.
750. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘தொழும்போது தங்கள் பார்வைகளை வானத்தில் உயர்த்துகிறவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? இதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்களின் பார்வை பறிக்கப்பட்டுவிடும்.’ என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 10