🔗

புகாரி: 7518

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

إِنَّ اللَّهَ يَقُولُ لِأَهْلِ الجَنَّةِ: يَا أَهْلَ الجَنَّةِ، فَيَقُولُونَ: لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ وَالخَيْرُ فِي يَدَيْكَ، فَيَقُولُ: هَلْ رَضِيتُمْ؟ فَيَقُولُونَ: وَمَا لَنَا لاَ نَرْضَى يَا رَبِّ وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ خَلْقِكَ، فَيَقُولُ: أَلاَ أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ، فَيَقُولُونَ: يَا رَبِّ وَأَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ، فَيَقُولُ: أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي فَلاَ أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا


பாடம் : 38

சொர்க்கவாசிகளுடன் இறைவன் உரையாடுவது.

7518. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி ‘சொர்க்கவாசிகளே!’ என்று அழைப்பான். அவர்கள் ‘எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம். நன்மை அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளது’ என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் நீங்கள் திருப்தியடைந்தீர்களா?’ என்று கேட்பான். மக்கள் ‘எங்கள் அதிபதியே! நாங்கள் திருப்தியடையாமலிருக்க எங்களுக்கு என்ன? நீ உன் படைப்புகளில் எவருக்கும் வழங்கியிராதவற்றை எங்களுக்கு வழங்கியிருக்கிறாயே!’ என்று பதிலளிப்பார்கள். அதற்கு அல்லாஹ், ‘இதைவிடவும் சிறந்ததை நான் உங்களுக்கு வழங்கட்டுமா?’ என்று கேட்பான். சொர்க்கவாசிகள் ‘எங்கள் அதிபதியே! இதைவிடச் சிறந்தது எது?’ என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் ‘உங்களின் மீது என் திருப்தியைப் பொழிகிறேன். இனி என்றுமே உங்களின் மீது நான் கோபப்படமாட்டேன்’ என்று சொல்வான்.

என அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்.160

Book : 97