نَزَلَتْ هَذِهِ الآيَةُ {وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ وَلاَ تُخَافِتْ بِهَا} [الإسراء: 110] فِي الدُّعَاءِ
7526. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
‘(நபியே!) உங்கள் தொழுகையில் நீங்கள் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம். மிகவும் தாழ்த்தவும் வேண்டாம்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 17:110 வது) வசனம் பிரார்த்தனை (துஆ) தொடர்பாக அருளப்பெற்றது.
இதை உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.166
Book :97