🔗

புகாரி: 7552

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُ كَانَ فِي جَنَازَةٍ فَأَخَذَ عُودًا فَجَعَلَ يَنْكُتُ فِي الأَرْضِ، فَقَالَ: «مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا كُتِبَ مَقْعَدُهُ مِنَ النَّارِ أَوْ مِنَ الجَنَّةِ»، قَالُوا: أَلاَ نَتَّكِلُ؟ قَالَ: «اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ»، {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى} [الليل: 5] الآيَةَ


7552. அலீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவில் (நல்லடக்கத்தில்) பங்கெடுத்தார்கள். அப்போது குச்சியொன்றை எடுத்து தரையில் குத்தலானார்கள். மேலும், ‘சொர்க்கத்திலோ நரகத்திலோ தம் இருப்பிடம் எழுதப்பட்டிராத எவருமே உங்களிடையே இல்லை’ என்றார்கள். உடனே மக்கள் ‘நாங்கள் (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நற்செயல்கள் புரியாமல்) இருந்துவிட மாட்டோமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும்வழி) எளிதாக்கப்பட்டுள்ளது’ என்று சொல்லிவிட்டு ‘(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து நல்லறங்களை மெய்ப்பிக்கிறவருக்கு சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம்’ எனும் (திருக்குர்ஆன் 92:5-10 ஆகிய) இறைவசனங்களைக் கூறினார்கள்.192

Book :97