لَمَّا قَضَى اللَّهُ الخَلْقَ، كَتَبَ كِتَابًا عِنْدَهُ: غَلَبَتْ، أَوْ قَالَ سَبَقَتْ رَحْمَتِي غَضَبِي، فَهُوَ عِنْدَهُ فَوْقَ العَرْشِ
பாடம்: 55
மாறாக, இது பெருமை மிக்கக் குர்ஆன் ஆகும். இது பாதுகாக்கப்பெற்ற பலகையில் (பதிவாகி) உள்ளது எனும் (85:21,22ஆகிய) இறைவசனங்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்:
தூர் (சினாய்) மலை மீது சத்தியமாக! எழுதப்பெற்ற வேதத்தின் மீதும் சத்தியமாக! (52:1,2).
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: எழுதப்பெற்ற’ என்பதற்கு மூல ஏடான மொத்த ஏட்டில் எழுதப்பெற்ற என்று பொருள்.
50:18 ஆவது வசனத்தின் பொருளாவது: மனிதன் பேசும் எந்தப் பேச்சும் எழுதிப் பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நன்மை தீமை அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன.
(5:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யுஹர்ரிஃபூன’ எனும் சொல்லுக்கு அகற்றுகிறார்கள்’ என்ற பொருள் இருந்தாலும், எந்த இறை வேதத்திலிருந்தும் அதன் சொல்லை எவராலும் அகற்ற முடியாது. மாறாக, அதற்கு உண்மைக்குப் புறம்பான விளக்கமளிக்கிறார்கள் என்றே பொருளாகும்.
(6:156ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) திராசா’ என்பதற்கு ஓதுவது’ என்று பொருள்.
(69:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தஇய’ எனும் சொல்லுக்குப் பாதுகாத்தல்’ என்று பொருள்.
உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காக இந்தக் குர்ஆன் எனக்கு அருளப்பெற்றது எனும் (6:19ஆவது) வசனத்தின் பொருளாவது: மக்காவாசிகளுக்கும், இது யார் யாருக்கு எட்டுகிறதோ அவர்களுக்கும் இந்தக் குர்ஆன் ஓர் எச்சரிக்கையாகும்.
7553. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (படைப்புகளைப்) படைக்கும் பணியை நிறைவு செய்தபோது தன்னிடமுள்ள அரியாசனத்திற்கு மேலே ‘என் கோபத்தை என் கருணை வென்றுவிட்டது’ அல்லது ‘முந்திவிட்டது’ என்றொரு விதியை எழுதினான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அத்தியாயம்: 97