قَالَ سَعْدٌ: «كُنْتُ أُصَلِّي بِهِمْ صَلاَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، صَلاَتَيِ العَشِيِّ لاَ أَخْرِمُ عَنْهَا، أَرْكُدُ فِي الأُولَيَيْنِ، وَأَحْذِفُ فِي الأُخْرَيَيْنِ» فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: ذَلِكَ الظَّنُّ بِكَ
758. ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி) அறிவித்தார்.
ஸஃது (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம் ‘நபி (ஸல்) அவர்கள் தொழுதது போல் நான் அவர்களுக்கு (மக்களுக்கு) மஃரிபு, இஷாத் தொழுகைகளை நடத்தினேன். அதில் நான் எந்தக் குறைவும் செய்யவில்லை. முதலிரண்டு ரக்அத்களில் நீளமாகவும் பிந்திய இரண்டு ரக்அத்துகளில் சுருக்கமாகவும் ஓதுவேன்’ என்றார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) ‘நாமும் உம்மைப் பற்றி அவ்வாறே எண்ணுகிறோம்’ என்றார்கள்.
அத்தியாயம்: 10