سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” يَقْرَأُ: وَالتِّينِ وَالزَّيْتُونِ فِي العِشَاءِ، وَمَا سَمِعْتُ أَحَدًا أَحْسَنَ صَوْتًا مِنْهُ أَوْ قِرَاءَةً
பாடம் : 102 இஷாத் தொழுகையில் (குர்ஆன் வசனங் களை) ஓத வேண்டும்.
769. பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
இஷாத் தொழுகையில் ‘வத்தீனி வஸ்ஸைத்தூனி’ என்ற அத்தியாயத்தை நபி(ஸல்) அவர்கள் ஓத செவியுற்றுள்ளேன். அவர்களை விட அழகிய குரலில் வேறெவரும் ஓத நான் செவியுற்றதில்லை.
Book : 10