🔗

புகாரி: 782

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

إِذَا قَالَ الإِمَامُ: {غَيْرِ المَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ} [الفاتحة: 7] فَقُولُوا: آمِينَ، فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ المَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ


பாடம்: 113

பின்பற்றித் தொழுபவர் (மஃமூம்) ஆமீன் கூறுவது.

782. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இமாம் “கைரில் மஃக்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்” என்று கூறும்போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் ஒருவர் கூறும் ஆமீன், வானவர்கள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்துவிட்டால் அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


இந்த ஹதீஸை ஸுமைய் அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் வழியாக அறிவித்துள்ளதைப் போன்றே முஹம்மத் பின் அம்ர், நுஐம் அல்முஜ்மிர் ஆகியோரும் அறிவித்துள்ளனர்.


அத்தியாயம்: 10