🔗

புகாரி: 792

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كَانَ رُكُوعُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسُجُودُهُ وَبَيْنَ السَّجْدَتَيْنِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، مَا خَلاَ القِيَامَ وَالقُعُودَ قَرِيبًا مِنَ السَّوَاءِ»


பாடம் : 120 ருகூவில் முதுகைச் சமமாக வைப்பது.

அபூஹுமைத் (அப்துர்ரஹ்மான் அஸ்ஸாஇதீ-ரலி) அவர்கள் தம் தோழர்களிடையே (உரையாற்றுகையில்), நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்தார்கள். பின்னர் தமது முதுகை (சமமாக்குவதற்காக) சாய்த்தார்கள் என்று கூறியுள்ளார்கள்.

(குறிப்பு: காண்க: பின் வரும் ஹதீஸ்-828)

பாடம் : 121 ருகூஉவைப் பூரணமாக்குதல், (அதில்) நிலைகொள்ளுதல், (ஆடாமல் அசையாமல்) நிதானித்தல் ஆகியவற்றிற்குரிய வரம்பு. 

792. பரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் ருகூவும் அவர்களின் ஸஜ்தாவும் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையிலான இடைவெளியும் ருகூவிலிருந்து எழுந்து நிமிர்தலும் நிற்றல், உட்கார்தல் நீங்கலாக அனைத்தும் ஏறத்தாழ சமஅளவில் அமைந்திருந்தன.
Book : 10