🔗

புகாரி: 795

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، قَالَ: اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الحَمْدُ، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَكَعَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ يُكَبِّرُ، وَإِذَا قَامَ مِنَ السَّجْدَتَيْنِ، قَالَ: اللَّهُ أَكْبَرُ


பாடம் : 124 ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியதும் (தொழுவிக்கும்) இமாமும் அவரைப் பின் பற்றித் தொழுவோரும் கூற வேண்டியவை. 

795. ‘நபி(ஸல்) அவர்கள் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ எனக் கூறியபின் ‘அல்லாஹும்ம ரப்பனா வலகல் ஹம்து’ என்றும் கூறுவார்கள். மேலும் ருகூவு செய்யும் போதும் ருகூவிலிருந்து உயரும் போதும் தக்பீர் கூறுவார்கள். இரண்டு ஸஜ்தாக்களை முடித்து எழும்போதும் ‘அல்லாஹு அக்பர்’ எனக் கூறுவார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 10