«إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ: أَنْ يُرْفَعَ العِلْمُ وَيَثْبُتَ الجَهْلُ، وَيُشْرَبَ الخَمْرُ، وَيَظْهَرَ الزِّنَا»
பாடம் : 21
கல்வி அகற்றப்படுவதும் அறியாமை வெளிப்படுவதும்.
ரபீஆ பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் சிறிதளவேனும் கல்வியறிவு உள்ள ஒருவர் (அதைப் பயன்படுத்தாமல்) தம்மைப் பாழடித்திடுவது முறையல்ல என்று கூறியுள்ளார்கள்.
80. ‘கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும்; அறியாமை நிலைத்து விடுவதும்; மது அருந்தப் படுவதும்; வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி).
Book : 3